ஆப்நகரம்

யானைகளின் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்; தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

யானைகள் வழித்தட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Apr 2018, 1:35 pm
டெல்லி: யானைகள் வழித்தட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Supreme Court
உச்சநீதிமன்றம்


நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்களில் விதிகளை மீறி கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை அகற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு

ஆனால் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.

சுற்றுச்சூழல் சரியாக இருந்தால் தான், மனித சமூக சரியாக இருக்கும் என்று கூறி, கண்டனம் தெரிவித்தனர். எனவே 4 வாரங்களில் பதிலளிக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC orders Tamilnadu Govt to reply elephant pathway occupied case.

அடுத்த செய்தி