ஆப்நகரம்

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2019, 10:57 am
கர்நாடக மாநில சட்டமன்றம் இருநாட்கள் விடுமுறைக்கு இன்று மீண்டும் கூடுகிறது. ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்த நிலையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil SC


ஆனால் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தாமல், ஆளும் தரப்பினர் இரு நாட்களாக காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த குமாரசாமி அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கர்நாடகாவில் இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு?

சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முறையிட்டிருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாளை பார்க்கலாம் என்று பதில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கர்நாடகாவில் கனமழை: காவிரியில் 8,300 கனஅடி நீர் திறப்பு!

GSLV Mk III: இன்று விண்ணில் பாய்கிறது சந்தியான் 2

அடுத்த செய்தி