ஆப்நகரம்

Ayodhya Case: அயோத்தி துணை வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற மறுப்பு

அயோத்தி துணை வழக்கை வரும் அக்டோபர் 29ஆம் தேதி இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 3:09 pm
அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
Samayam Tamil supreme-court45-1538021520


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் துணை வழக்காக, தொடர்ப்பட்ட மனு ஒன்றில் மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமிய வழிபாட்டுமுறையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி பூஷன் மற்றும் நீதிபதி அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க அவசியமில்லை என தெரிவித்திருக்கிறது.

மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் அரசியில் சாசன அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (நீதிபதி அப்துல் நசீர் கோரிக்கையை ஏற்ற நிலையில் மற்ற இருவரும் மறுத்துள்ளனர்.)
நீதிபதி அப்துல் நசீர், “மசூதி இஸ்லாமின் இன்றியமையாத அங்கமாக என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும், இதனை விரிவான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி தீபக் மற்றும் தனது தரப்பு கருத்தைக் கூறியுள்ள நீதிபதி பூஷன், மசூதிக்கு சென்று தொழுகை செய்வது இஸ்லாமின் வழிபாட்டு முறையா என்பதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் 1994ஆம் ஆண்டு இஸ்மாயில் பரூகி வழக்கில் நமாஸுக்கு மசூதி கட்டயாமில்லை எனவும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்நிலையில், வரும் அக்டோபர் 29ஆம் தேதி இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி