டெல்லி: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் சிறையில் இருந்து வருகிறார்.
மகாராஷ்டிர அரசியல்: கூட்டணிக் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்
அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சிறையில் தவியாய் தவிக்கும் ப.சிதம்பரம்; ஜாமீன் மனு மீது ஆட்டம் காட்டும் உச்ச நீதிமன்றம்!
முன்னதாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவரை மேலும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் சிறையில் இருந்து வருகிறார்.
மகாராஷ்டிர அரசியல்: கூட்டணிக் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்
அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சிறையில் தவியாய் தவிக்கும் ப.சிதம்பரம்; ஜாமீன் மனு மீது ஆட்டம் காட்டும் உச்ச நீதிமன்றம்!
முன்னதாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவரை மேலும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.