ஆப்நகரம்

சொத்தைப் பிரிக்கும் போது பெண்களுக்கும் சம பங்கு - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

இந்து சொத்துரிமை சட்டப்படி பெண்களுக்கு சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று மிக முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 12:54 pm
ஆண், பெண் சமத்துவம் பற்றி எவ்வளவு பேசினாலும் அது நடைமுறையில் இருப்பது தான் சாலச் சிறந்தது. அந்த வகையில் குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை வரையறுக்கும் வகையில் ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டும் தான் உரிமை. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சீதனமும் சொத்தாக கருதப்பட்டது. இதையடுத்து 1956ல் ‘இந்து வாரிசுரிமை சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஓர் இந்து ஆண் இறக்கும்பட்சத்தில் அவருடைய சொத்துக்கள் மனைவி, மகன்கள், மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும்.
Samayam Tamil Supreme Court of India


பின்னர் ஆண்களைப் போல் பெண்களுக்கு பரம்பரைச் சொத்தில் பங்கு இருக்கிறது என்று 1989ல் வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து 2005ல் இந்து வாரிசு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இதில் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளுக்கு இருக்கும் சம உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது குறித்த 2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி அருண் மிஷ்ரா, பெற்றோருக்கு மகள் என்பவள் வாழ்நாள் முழுவதும் தான்.

சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா - என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்?

ஒருமுறை மகள் என்றால் அவர் எப்போதும் மகளே. எனவே பெண்ணின் தந்தை உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண்களுக்கும் சம பங்கு வழங்க உண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த செய்தி