ஆப்நகரம்

பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம்

அரசு பணியில் பதவி உயா்வின் போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை 7 போ் கொண்ட அமா்விற்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு

Samayam Tamil 26 Sep 2018, 11:18 am
அரசு பணியில் பதவி உயா்வின் போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
Samayam Tamil Supreme court 1


அரசு பணியில் உள்ளவா்கள் பதவி உயா்வு பெறும் போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என்று கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீா்ப்பின் காரணமாக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் பதவி உயா்வு பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவே இந்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்சரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமா்விற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் கோரப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பில், பணியாளா்கள் பணியில் சேரும் போது இடஒதுக்கீடு பெறுகின்றனா். அவா்கள் பதவி உயா்வு பெறும் சமயத்தில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று உத்தரவிட்டுள்ளனா்.

மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமா்விற்கு மாற்றக் கோாிய மத்திய அரசின் கோாிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அடுத்த செய்தி