ஆப்நகரம்

Adultery verdict: தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை - உச்சநீதிமன்றம்

தகாத உறவு கிரிமினல் குற்றம் இல்லை, ஆனால் அது விவாகரத்து பெறுவதற்கான காரணமாக இருக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 1:30 pm
டெல்லி: தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil d36a04ac0b41d6a84266812dcff0ef1e


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 497ஐ நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

திருமணமான பெண் தன் கணவரின் அனுமதியின்றி வேறொரு ஆணுடன் தகாத உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படமாட்டார். சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

இச்சட்டப்பிரிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பில், "கணவர் ஒரு பெண்ணுக்கு எஜமானர் அல்ல. திருமணத்திற்கு பின் தகாத உறவு கொள்வது, யாரையும் தற்கொலைக்குத் தூண்டாத வரை கிரிமினல் குற்றம் ஆகாது." என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “திருமண பந்தத்திற்குப் பின் தகாத உறவு குற்றச்செயலாக ஆகாது. ஆனால், திருமண பந்தத்திற்கு ஓர் முடிவாக அமையலாம்.”, “தகாத உறவுக்கு தண்டனை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது.”, “சட்டப்பிரிவு 497 பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பாதிக்கிறது.” எனவும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

158 ஆண்டுகள் பழமையான சட்டப்பிரிவு 497ல் குற்றமாகக் கருதப்பட்ட தகாத உறவு, உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் குற்றம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி