ஆப்நகரம்

Supreme Court: ரூ.10 கோடி வேணுமா? போய் தொகுதி வேலையை பாருங்க - கார்த்தி சிதம்பரத்தை துரத்திவிட்ட உச்சநீதிமன்றம்!

தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Samayam Tamil 29 May 2019, 11:35 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
Samayam Tamil Karti Chidambaram


இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா, ஏர்செல் - மேக்ஸில் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடு செல்ல நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் அனுமதி கேட்டார். அதற்கு ரூ.10 கோடி பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பிணைத் தொகையை செலுத்திவிட்டு, நீதிமன்ற அனுமதியைப் பெற்றார். இந்நிலையில் இந்த தொகையை திரும்பக் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பணம் எல்லாம் திரும்ப தர முடியாது. நீங்கள் வெற்றி பெற்ற மக்களவை தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி