ஆப்நகரம்

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை!

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்

Samayam Tamil 10 Nov 2020, 9:37 pm
கடந்த 2018ஆம் ஆண்டில் கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கடந்த 4ஆம் தேதி அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி


அதன் தொடர்ச்சியாக அலிபாக்கில் உள்ள அரசுப் பள்ளியின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அர்னாப் கோஸ்வாமி, தற்போது டலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனக்கு இடைக்கால ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த ஜாமீன் மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

டலோஜா மத்திய சிறையில் அர்னாப் கோஸ்வாமி; ஏன் இந்த திடீர் மாற்றம்?

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ரிபப்ளிக் டிவி தீவிரமாக செய்தி வெளியிட்டு வருகிறது. மேலும், #IndiaStandsWithArnab என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அவருக்கு ஆதரவான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவரது கைதுக்கு பாஜக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி