ஆப்நகரம்

காவிரி விவகாரம்: கர்நாடக அரசின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

TNN 12 Sep 2016, 9:43 am
புதுதில்லி: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.
Samayam Tamil sc to hear karnatakas plea on modification of cauvery water order
காவிரி விவகாரம்: கர்நாடக அரசின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை


காவிரியில் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதன் தொடர்ச்சியாக ரயில் மறியல், கர்நாடக, தமிழக எல்லைப்பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தம், தமிழர்கள் மீது தாக்குதல் என பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில், 13 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை திருத்தம் செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் விநியோகிக்க முடியாத அசாதாரணமான சூழல் நிலவுவதால், தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீரை 10 நாட்கள் வரை வழங்குவது சாத்தியமில்லை என்று சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா கூறினார். சீராய்வு மனு மீதான விசாரணையில் கர்நாடகாவிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜெயச்சந்திரா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி