ஆப்நகரம்

விவசாயிகளின் போராட்டக் களம் மாறுமா; என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்?

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Samayam Tamil 16 Dec 2020, 11:15 am
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட இந்திய விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு எல்லைப் பகுதிகளை முடக்கும் வகையில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் நாடு தழுவிய வேலைநிறுத்தம், சுங்கச்சாவடிகள் முற்றுகை, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் என பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் விவசாயிகளின் போராட்டம் 20 நாட்களை கடந்துள்ளது.
Samayam Tamil Farmers Protest


இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, விவசாயத்துறையில் கொண்டு வந்து சீர்திருத்தங்களை விவசாயிகள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் நிலத்தை வேறு யாராவது ஆக்கிரமித்துக் கொள்வார்களோ என்று பயப்படுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த கோரிக்கைகளைத் தான் புதிய சட்டங்கள் மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இடதுசாரிகளை ஓரங்கட்டுமா பாஜக? பரபரப்பான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் இருந்து போராடும் விவசாயிகளை வெளியேற்ற வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சாலைகளை தடுத்து நடத்தப்படும் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளை போராட்டக் களத்தை டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ள வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.

ஈஸ்வரன் ஷூட்டிங்கில் திமிராக நடந்தாரா சிம்பு?: சுசீந்திரன்

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே, நீதிபதி ஏ.எஸ் போபண்ணா, நீதிபதி வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி