ஆப்நகரம்

பள்ளிகளை திறக்க அனுமதி... இந்த வகுப்பு மாணவர்களெல்லாம் இனி ஸ்கூலுக்கு போகலாம்!!

ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் வரும் 21 ஆம் தேதி (செப்டம்பர் 21) முதல் பள்ளிகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Samayam Tamil 8 Sep 2020, 9:42 pm
நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை (unlock 4.0) மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது.
Samayam Tamil school reopen


இதில் முக்கியமாக, மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பள்ளிக்கு சென்று, தங்களது ஆசிரியர்களிடம் ஆலோசனைகளை பெறலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

“பள்ளி மாணவர்களுக்கு இலவச பால்” வெங்கய்ய நாயுடு யோசனை!

இந்த நிலையில், குறிப்பிட்ட வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்வது தொடர்பான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள், வரும் 21 ஆம் தேதி முதல் (செப்டம்பர் 21) தங்களது சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு செல்லலாம்.
ப்ள்ளிக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் அதற்கான ஒப்புதலை தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் பெறுவது அவசியம்

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதத்தில் ஆசிரியர்கள் ஆலோசனைகளை மட்டுமே அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்களுக்கான ஆன் -லைன் வகுப்புகளையும் தொடர வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், பள்ளி வளாகத்தில் ஆறு அடி தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று மாணவர்கள் அவ்வப்போது கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுவதையும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (containment zone) இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரக்கூடாது.

பள்ளி வளாகத்துக்குள் கூட்டுப் பிரார்த்தனை, விளையாட்டு, கூட்டமாக ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு ஆவோசனை வழங்க பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி