ஆப்நகரம்

ஜே.என்.யூ மாணவர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு; டெல்லியில் பதற்றம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளை முடக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

Samayam Tamil 11 Nov 2019, 5:14 pm
டெல்லி: ஆடைக்கட்டுப்பாடு, கட்டண உயர்வு போன்ற கோர்க்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாஅல் அங்கு பதற்றம் நிலவுகிறது.
Samayam Tamil ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்
ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்


இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக திகழும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாட்டின் பல சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளது. இடதுசாரி, தலித், வலதுசாரி மாணவ அமைப்புகள் இந்த பல்கலைக்கழகத்தில் வலுவாக இயங்கக்கூடிய ஒன்று. டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.

புரட்டி எடுத்துச் சென்ற புல்புல் புயல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் வேதனை!

நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை இந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை கொண்டது தொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தேசவிரோத முழக்கங்களை எழுப்பியதாக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில், இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளை முடக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன், ஆடைக் கட்டுப்பாடு, பன்மடங்காக உயர்த்தப்பாட்ட மாணவர்களின் விடுதி கட்டணம், விடுதி நிர்வாக அமைப்பின் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டால் ரூ.20,000 வரை அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோர்க்கைகளை வலியுறுத்தி ஜே.என்.யூ மாணவர் அமைப்பினர் கடந்த வாஅரம் முதல் போராட்டத்த்ல் ஈடுபட்டு வருகின்றனர்.


அத்துடன், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ளும் ஜே.என்.யூ பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பல்கலைக்கழகத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அதனை மீறி உள்ளே நுழைய முயன்ற மாணவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. எனினும், மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி