ஆப்நகரம்

இரவிலும் விமானத்தை தேடும் பணி: அமைச்சர் தகவல்

மாயமான விமனாப்படை விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்பு துறை இணையமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார்.

TOI Contributor 22 Jul 2016, 7:44 pm
புதுதில்லி: மாயமான விமனாப்படை விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்பு துறை இணையமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil search can continue at night also dr s bhamre mos defence on missing iaf plane
இரவிலும் விமானத்தை தேடும் பணி: அமைச்சர் தகவல்


சென்னை தாம்பரத்தில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த, விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட் பிளேர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் கிளம்பிய சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.

அதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் 2 டார்னியர் விமானங்கள் 4 கடற்படை கப்பல்கள் விமானத்தை தேடி வருகின்றன. சென்னையிலிருந்து 200 கி.மீ., கிழக்கே, வங்காள விரிகுடா கடலில் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்பு துறை இணையமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி