ஆப்நகரம்

இந்தியாவில் 2வது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; அச்சமூட்டும் கேரளா- உஷார் தமிழகமே!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Feb 2020, 10:35 am
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Corona in Kerala


பல்வேறு நாடுகளில் வேகமாக வைரஸ் பரவி வருவதால் சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்தது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இவர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதுவே நாட்டிலேயே முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் 2020 : மத்திய அரசின் சாதனைகள் என்னென்ன? நிர்மலா சீதாராமன் உரை...

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இரண்டாவதாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் இருந்து கேரளா திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த இளைஞருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

டெல்லியில் அடுத்த துப்பாக்கிச் சூடு, இந்த முறை “இந்துக்கள்தான் ஆளவேண்டும்” என...

இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை இணை இயக்குநர் உறுதி செய்துள்ளார்.

அடுத்த செய்தி