ஆப்நகரம்

கொரோனாவின் இரண்டாவது அலை; அதுவும் உச்சத்தில் - எச்சரிக்கையூட்டும் முதல்வர்!

கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலை உச்சத்தில் இருப்பதாக முதல்வர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2020, 5:23 am
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி, 2,60,623 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் 2,24,375 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 5,123 பேர் பலியாகியுள்ளனர். 31,125 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 27.6 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்ததால் வைரஸ் பாதிப்பு அடுத்தடுத்த விபரீதங்களை ஏற்படுத்தியது.
Samayam Tamil Coronavirus in Delhi


தலைநகர் டெல்லியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கோவிட்-19 பாதிப்பு சற்றே குறையத் தொடங்கியது. அதன்பின்னர் மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனை கொரோனாவின் இரண்டாவது அலை என்று கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி புதிய பாதிப்புகள் 4,500ஆக பதிவாகின.

கொன்று குவித்த கொரோனா; நீளும் பட்டியல் - இந்தியாவிற்கு பயங்கர ஷாக்!

வல்லுநர்கள் கருத்துப்படி, டெல்லியில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. இது வரும் நாட்களில் படிப்படியாக குறையும். புதிய பாதிப்புகள் அதிகரிக்கும் போதெல்லாம் மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லி மக்கள் உதவியுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வந்துள்ளோம்.

இந்த விஷயத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. கொரோனா மோசமாக பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டேன். இதில் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொறுப்புமிக்க மாநில அரசாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி