ஆப்நகரம்

இன்று முதல் 3 நாட்கள்- பெங்களூரு மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!

பெங்களூருவில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி வரும் 21ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Dec 2019, 8:46 am
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் 2019க்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
Samayam Tamil Protest


இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழி செய்கிறது.

இரவோடு இரவாக போராட்டக் களத்தை சுத்தம் செய்த ஜாமியா மாணவர்கள்

இதற்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க நேற்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன்று போராட்டங்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இன்று காலை 6 மணி முதல் வரும் 21ஆம் தேதி நள்ளிரவு வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோ.தர்மனுக்காக சூல் கொண்டது 2019ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது...

இதுதொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இன்றைய தினம் போராட அனுமதி கேட்டுள்ளன.

இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நேரிடும். எனவே எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையொட்டி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறினார்.

உண்மையான ‘இந்து’ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்கமாட்டான்: கொதிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்!

144 தடை உத்தரவின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து செல்லக் கூடாது. பொதுக் கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது.

அடுத்த செய்தி