ஆப்நகரம்

டெல்லியில் 144 தடை உத்தரவு: எவ்வளவு நாள் தெரியுமா?

டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தப்படும் வகையில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jan 2021, 7:15 am
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விவசாயிகள் கடும் குளிரையும், காவல் துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil delhi protest


போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லிக்குள் நுழைய முயற்சித்தன. காவல்துறையினர் தடுப்புகளை போட்டு விவசாயிகளை மறித்தனர்.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சில இடங்களில் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்குள் விவசாயிகள் நுழைந்தனர்.
சசிகலா இன்று விடுதலை: ஆர்ப்பரிக்கும் ஆதரவாளர்கள்!
காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் டெல்லியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் டெல்லியில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செங்கோட்டை உச்சியில் ஏறிய விவசாயிகள்; வெடித்தது கலவரம் - போர்க்களமான டெல்லி!சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி