ஆப்நகரம்

புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பிருச்சு: 144 தடை உத்தரவு அமல்!

புதிய உயிர்க்கொல்லி நோய் பரவத் தொடங்கியதால் ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 11:48 pm
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், ஏராளமான காகங்கள் உயிரிழந்துள்ளன. இதைத்தொடர்ந்து, ஜலாவர் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ளது.
Samayam Tamil Representational image


பறவைகளிடையே பரவக்கூடிய வைரஸ் வாயிலாக இந்த நோய் பரவியுள்ளது. A type influenza வைரஸால் இந்த நோய் பரவுகிறது. இந்த வைரஸ் மிக வேகமாக பறவைகளிடையே பரவக்கூடியது.

கொரோனாவுக்கு ஆப்பு: வெளுத்துக் கட்டிய இந்தியா... அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!
பறவைகள் மற்றும் இதர உயிரினங்களை கொல்லக்கூடிய அளவுக்கு இந்த வைரஸ் கொடியது. இதுமட்டுமல்லாமல், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவக்கூடும்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியான சாம்பார் ஏரியில் பறவைக் காய்ச்சலின் காரணமாக ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்தன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் ஆகும்.

இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் காகங்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பெத்த மகளையே கேவலப்படுத்துற: ஷிவானி அம்மாவை விளாசிய சின்மயி
இறந்த காகங்களின் மாதிரிகளை எடுத்து கால்நடை வளர்ப்பு துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜோத்பூருக்கு ஏராளமான புலம்பெயர் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றன.

அடுத்த செய்தி