ஆப்நகரம்

சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..!

சபரிமலையில் இன்று மண்டல பூஜைக்காக திறக்கப்படவுள்ள நடையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த காவலர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

Samayam Tamil 16 Nov 2019, 3:19 pm
திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. சாமியை தரிசிக்க 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதால் பம்பையில் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..!


இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புப்படை போலீஸ் பிஜு என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்ற பிரச்னை இருந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் அக்டோபரில் அந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

ஆனால் அதற்கு இந்து அமைப்பினர் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் கடந்த ஆண்டு பல்லாயிர கணக்கான பெண்கள் சபரி மலைக்கு படையெடுத்தனர். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத வலது சாரிகள் மலைக்கு வந்த பெண்களை பம்பை பகுதியிலேயே தடுத்து திருப்பி அனுப்பினர். ஆனாலும் கடும் எதிர்ப்பையும் மீறி இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன.

அதனை தோடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. ஆனால் பெரும்பாண்மை நீதிபதிக்குள் ஏற்பட்ட மாறுபட்ட கருதினால் இந்த விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதே சமயம் முந்தைய தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆகையால் இந்த வருடமும் பெண்கள் சபரிமலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என இந்து அமைப்பினர் திட்டவட்டமாக இருப்பதால் போலீசாருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஆந்திராவில் இருந்து வந்த 10 பெண் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி