ஆப்நகரம்

முதல்வரை கொல்ல சதி; மர்ம கடிதம் அனுப்பியது யார்? பெரும் பரபரப்பு!

ஒப்பந்த கொலையாளிகள் மூலம் முதல்வர் உயிருக்கு ஆபத்து என்ற மர்ம கடிதத்தை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 3:06 pm
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒடிசாவை ஆளும் சிறப்புக்குரியவர். இந்நிலையில் முதல்வரின் இல்லத்திற்கு சமீபத்தில் மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்வர் நவீன் பட்நாயக்கை கொல்ல ஒப்பந்த கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஏகே-47, ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் ஒடிசா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், ஹரியானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பதிவெண் கொண்ட 17 வாகனங்களை வைத்திருக்கின்றனர்.
Samayam Tamil Threat Letter to CM


எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை செயலகம் மற்றும் முதல்வர் வழக்கமாக செல்லும் இடங்கள் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த காவல்துறை டிஜிபி, காவல்துறை புலனாய்வு இயக்குநர் ஆகியோருக்கு மாநில உள்துறை சிறப்பு செயலாளர் சந்தோஷ் பாலா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பில் புதிய சிக்கல்; அரசுக்கு வல்லுநர்கள் முன்வைக்கும் கோரிக்கை!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக நவீன் நிவாஸ் இல்லத்தில் இருந்தபடியே தனது அலுவலகப் பணிகளை முதல்வர் கவனித்து வருகிறார். அரசு கூட்டங்கள், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் ஆன்லைன் மூலமாகவே கலந்து கொள்கிறார்.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் கொலை வழக்கில் கைதாகி சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஓடிடியில் வெளியாகிறது!
அதாவது தனக்கு 50 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சட்டீஸ்கர் மாநில அரசு விசாரணையில் இறங்கியது.

அடுத்த செய்தி