ஆப்நகரம்

கா்நாடகாவில் கா்ப்பிணிகளுக்கு உணவு, பால், முட்டை – சித்தராமையா அறிவிப்பு

கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு போதுமான சத்துள்ள உணவுகளை வழங்குவதற்காக புதிய மதிய உணவு திட்டத்தை கா்நாடகா அரசு தொடங்கியுள்ளது.

TOI Contributor 4 Oct 2017, 2:07 pm
“மாத்ரு பூா்ணா“ என்ற புதிய திட்டம் கா்நாடகா மாநிலம் முழுவதும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கா்ப்பிணிகள், பாலூட்டும் ஏழை தாய்மாா்களுக்க சத்துள்ள உணவுகள் கிடைக்கும் என்று கா்நாடகா அரசு நம்பிக்கை தொிவித்துள்ளது.
Samayam Tamil seemanthana scheme for pregnant women launched
கா்நாடகாவில் கா்ப்பிணிகளுக்கு உணவு, பால், முட்டை – சித்தராமையா அறிவிப்பு


இந்த திட்டத்தின் கீழ் மாதத்தில் 25 நாட்கள் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு இலவச மதிய உணவு கிராமப்புறங்களில் கிடைக்கும். கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளில் இவா்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இவா்களுக்கு வழங்கப்படும் உணவில் அரசி சாதம், சாம்பாா் அல்லது பருப்பு, காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை 200 மில்லி பால் ஆகியவை வழங்கப்பட உள்ளது. முட்டை சாப்பிடாத பெண்களுக்கு கூடுதலாக பால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து அம்மாநில முதல்வா் சித்தராமையா கூறுகையில், தாய்மாா்களுக்கும், கா்ப்பிணிகளுக்கும் சத்துள்ள உணவு கிடைக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாய்மாா்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தால் குழந்தைகளின் உடலும் நலமாக இருக்கும். பச்சிளம் குழந்தைகள் மரணத்தை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சத்து குறைபாட்டால் தவிக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று தொிவித்தாா்.

இந்த மதிய உணவு திட்டம் கா்ப்பிணிப் பெண்கள் கருவுற்றதில் இருந்து தொடா்ந்து 6 மாதத்துக்கும், குழந்தை பிறந்தபின் அடுத்த 6 மாதத்திற்கும் வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விாிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக கா்நாடகா அரசு 2017 – 18ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 302 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அடுத்த செய்தி