ஆப்நகரம்

சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு 4 வழக்கில் ஆயுள் தண்டனை

கர்நாடகாவில் 20 பெண்களைக் தொடர்ச்சியாகக் கொன்ற சயனைடு மோகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

tnn 16 Sep 2017, 6:20 am
கர்நாடகாவில் 20 பெண்களைக் தொடர்ச்சியாகக் கொன்ற சயனைடு மோகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil seial rapist in bangalore
சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு 4 வழக்கில் ஆயுள் தண்டனை


கடந்த 2003 முதல் 2009 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 20 பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு,அவர்களை கொலை செய்தவன் மோகன். அனைவரையும் சயனைடு கொடுத்து கொன்றதால், இவனுக்கு சயனைடு மோகன் என்ற பெயரும் ஏற்பட்டு விட்டது.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஆசிரியர் வேலை பார்த்த, இவன், வழக்குகளில் சிக்கியதால், பணியில் இருந்து நீக்கப்பட்டான். பின்னர், பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பதும், அவர்ளை கொலை செய்வதும் வாடிக்கையாக கொண்டான்.

2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முடிந்து தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கி்றான்.

இந்நிலையில், இவன் மீது பதியப்பட்ட நான்காவது வழக்கின் விசாரணை தீரப்பு நேற்று உத்தரவிட்டப்பட்டது. அதன்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளில் 6 மாதம் முல் 7 ஆண்டகள் வரை கடுங்கால் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி