ஆப்நகரம்

சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

குஜராத் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 12 Jun 2016, 5:02 pm
சமீபகாலமாக அதிகரித்து வரும் செல்பி மோகம் பலரின் உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது.உயரமான கட்டிடங்களிலிருந்து செல்பி எடுக்க முயன்று உயிரை விட்ட சம்பவங்கள் மாறி இப்போது சிங்கம் போன்ற வனவிலங்குகளுடம் செல்பி எடுக்க முயன்று உயிரை விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Samayam Tamil selfi with lion baned in gujarat
சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை


சமீபத்தில் கூட சிங்கங்களுடன் செல்பி எடுக்க முயன்ற மூவர், சிங்கங்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ள குஜராத் வனத்துறை, உயிரிழப்பை தடுக்கும் வகையில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க தடை விதித்துள்ளது.

இனி வனவிலங்கு சரணாலயங்கள் அல்லது காட்டுக்குள் வாகனங்கள் மூலம் வனவிலங்குகளை பார்வையிட செல்பவர்கள் சிங்கங்களுடம் செல்பி எடுக்க கூடாது எனவும் மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் குஜராத் வனத்துறை அறிவித்துள்ளது.உலகிலேயே ஆசிய சிங்கங்களுக்கான சரணாலயமாக குஜராத்தில் உள்ள 'கிர் காடுகள்' விளங்குவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி