ஆப்நகரம்

மோடி பேசியதை மாணவர்கள் பார்த்தார்களா? ஆதாரம் கேட்கும் அரசு!

தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி பேசியதைக் மாணவர்கள் அனைவரும் பார்த்தனர் என்பதற்கு வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களைக் அனுப்ப பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2018, 10:21 am
தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி பேசியதைக் மாணவர்கள் அனைவரும் பார்த்தனர் என்பதற்கு வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களைக் அனுப்ப பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil send pics videos to prove students saw pm modis pariksha par charcha chat schools told
மோடி பேசியதை மாணவர்கள் பார்த்தார்களா? ஆதாரம் கேட்கும் அரசு!


பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் உள்ள மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பள்ளி மாணவ மாணவியர் பொதுத் தேர்வை எதிர்கொள்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,400க்கும் அதிகமான மாணவ மாணவியர் பங்கேற்று, கேள்விகளை எழுதி எழுப்பினர்.

தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது, மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், யோகா, மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிகழ்ச்சி தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிப்பரப்பு மூலம் மாணவ மாணவியர் அனைவரும் பார்த்தனர் என்பதற்கு சாட்சியாக வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களை அனுப்ப வேண்டும் என்றும் மத்திய மனினவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் (நேற்று) அந்தந்த மாநில கல்வி அமைச்சகத்திடம் இந்த ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி