ஆப்நகரம்

யார் இந்த மணிவண்ணன்? இவரது இடமாற்றத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய எதிர்ப்பு?

ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் பணியிட மாற்றத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக்குகள் வைரலாகும் நிலையில் இதன் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 12 May 2020, 2:03 pm
கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் பி.மணிவண்ணன்(48). இவர் கடந்த ஓராண்டாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் கர்நாடக மாநிலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்நிலையில் கர்நாடக அரசு அவரை திடீரென பணியிட மாற்றம் செய்துள்ளது. இவருக்கு பதிலாக வர்த்தக மற்றும் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் மகேஷ்வர் ராவ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
Samayam Tamil கேப்டன் மணிவண்ணன்


இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மணிவண்ணனுக்கு வேறு பதவிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இவரை மீண்டும் அதே பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறி சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

இரண்டே நாளில் 10 ஆயிரம், நான்கில் 66% - எகிறிய தமிழ்நாடு; பதறிய இந்தியா!

இதையொட்டி #CaptainManivannan, #BringBackCaptain, #BringBackManivannan உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கிடைத்த தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் ஊழியர்களுக்கு சரியான சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு மணிவண்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ஊழியர்களுக்கு முழு சம்பளத்தை வழங்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

சம்பளமின்றி மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தொழிலாளர் நலத்துறையின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி சம்பந்தப்பட்ட துறைக்கு 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதனால் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மிகவும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் விவகாரத்தை முதலமைச்சர் எடியூரப்பாவின் பார்வைக்கு தொழில் நிறுவனங்கள் எடுத்துச் சென்றுள்ளன. இதன் விளைவாக அமைச்சர் ஹெப்பார் அப்படியே யூ-டர்ன் அடித்துள்ளதாக தெரிகிறது.

’ஆரோக்கிய சேது’வில் நமது டேட்டா பாதுகாப்பாக இருக்குமா? - மத்திய அரசு என்ன சொல்கிறது?

அதாவது தொழில்நிறுவனங்களுக்கு அதிகாரிகள் யாரும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் தான் ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி