ஆப்நகரம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் புதிய வசதி: பக்தர்கள் ஹேப்பி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Authored bySM Prabu | Samayam Tamil 15 Dec 2022, 12:23 pm
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் திறக்கப்பட்டது.
Samayam Tamil சபரிமலை ஐய்யப்பன் கோயில்
சபரிமலை ஐய்யப்பன் கோயில்


அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மண்டல அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கோயில் நடை மூடப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தினமும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களின் எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுடன் பேசி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை... ராகுலுடன் கைகோர்த்த விஐபி!
மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் sabarimalaonline.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தாங்கள் தரிசனம் செய்ய விரும்பும் தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய கட்டணம் இல்லை. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பதிவு தேவையில்லை. ஒரு கணக்கிலிருந்து 10 யாத்ரீகர்கள் தரிசனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் தரிசன இடங்களை முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நேரடி முன்பதிவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை பாதைகளில் 13 இடங்களில் செயல்படும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து சன்னிதானம் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி