ஆப்நகரம்

20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தூக்குதண்டனை ரத்து

கர்நாடகாவில் 20 பெண்களைக் தொடர்ச்சியாகக் கொன்ற சயனைடு மோகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNN 13 Oct 2017, 3:06 pm
கர்நாடகாவில் 20 பெண்களைக் தொடர்ச்சியாகக் கொன்ற சயனைடு மோகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil serial killer cyanide kumar judgement cancelled
20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தூக்குதண்டனை ரத்து


கடந்த 2003 முதல் 2009 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 20 பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு,அவர்களை கொலை செய்தவன் மோகன். அனைவரையும் சயனைடு கொடுத்து கொன்றதால், இவனுக்கு சயனைடு மோகன் என்ற பெயரும் ஏற்பட்டு விட்டது.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஆசிரியர் வேலை பார்த்த, இவன், வழக்குகளில் சிக்கியதால், பணியில் இருந்து நீக்கப்பட்டான். பின்னர், பெண்களிடம் உல்லாசம் அனுபவிப்பதும், அவர்ளை கொலை செய்வதும் வாடிக்கையாக கொண்டான்.

2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முடிந்து தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கி்றான்.

இவன், அனிதா என்ற பெண்னை சீரழித்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், மோகன் குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்துள்ளது. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, வாழ்நாள் முழுவதும் அவரை சிறையில் அடைக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

இதுவரை 7 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பெண்களின் வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அடுத்த செய்தி