ஆப்நகரம்

10 கொலை, 6 மாத டைமிங்; கும்ப மேளாவில் சுற்றி வளைக்கப்பட்ட சீரியல் கில்லர்!

பிரயாக்ராஜ்: கொடூர சீரியல் கில்லர் கும்ப மேளாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 26 Jan 2019, 3:50 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அலகாபாத் விளங்குகிறது. சமீபத்தில் இதன் பெயர் பிரயாக்ராஜ் என்று மாற்றப்பட்டது. இந்நிலையில் பிரயாக்ராஜின் பொது இடங்களில் உறங்குபவர்கள், தொடர்ச்சியாக கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டு வந்தனர்.
Samayam Tamil Kumbh Mela


இந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருந்தன. இந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி, கைத்காஞ் பகுதியில் திரிவேனி தர்ஷன் ஓட்டல் பகுதியில், இரவு நேரத்தில் ஒருவரை சீரியல் கில்லர் கழுத்தறுத்து கொலை செய்துள்ளான்.

இதையடுத்து 18ஆம் தேதி நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த மூவரை கொடூரமாக தாக்கிச் சென்றுள்ளான். சமீபத்தில் கும்பமேளா பகுதியிலும் இரவில் ஒருவரை கொலை செய்துள்ளான். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கொலையாளி அடையாளம் காணப்பட்டான். அவனைக் கைது செய்ய, கும்பமேளா நடக்கும் பகுதியில் போலீசார் மாறுவேடத்தில் சுற்றித் திரிந்தனர். இந்நிலையில் ஓரிடத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டான்.

அவனிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி