கடந்த 18 நாட்களில் மூன்றாவதாக பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் கொல்லப்பட்டுள்ளார்.
கௌரி லங்கேஷ்: கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். கௌரி லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரியை நடத்தி வந்த இருவர் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதினார். இதனால், அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இவரது படுகொலை நாடு முழுவதும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது.
சாந்தனு பவுமிக்: செப்டம்பர் 20ஆம் தேதி, திரிபுரா மாநிலத்தின் கோவாய் பகுதியில் நேற்று பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு கலவராமாகப் பெருகியது. இது குறித்த தகவல் சேகரிக்க சென்ற ’தீன் ராத்’ தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுமிக், மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கே.ஜே.சிங்: 65 வயதான மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆவார். அவரும் மற்றும் அவரது 92 வயது தாயார் குர்சரண் கவுரும் மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலைக்கு மேல் கொலை நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கௌரி லங்கேஷ்: கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். கௌரி லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரியை நடத்தி வந்த இருவர் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதினார். இதனால், அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இவரது படுகொலை நாடு முழுவதும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது.
சாந்தனு பவுமிக்: செப்டம்பர் 20ஆம் தேதி, திரிபுரா மாநிலத்தின் கோவாய் பகுதியில் நேற்று பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு கலவராமாகப் பெருகியது. இது குறித்த தகவல் சேகரிக்க சென்ற ’தீன் ராத்’ தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுமிக், மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கே.ஜே.சிங்: 65 வயதான மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆவார். அவரும் மற்றும் அவரது 92 வயது தாயார் குர்சரண் கவுரும் மொகாலியில் உள்ள அவர்களது வீட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலைக்கு மேல் கொலை நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.