ஆப்நகரம்

காங்கிரஸ்-மஜதவினர் அமளி; 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட அவை

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களின் அமளியால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் பேச அனுமதி வழங்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2019, 8:28 pm
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு நாட்கள் நடந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனிடையே இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என கர்நாடகா சபாநாயகர் அறிவித்திருந்தார்.
Samayam Tamil Karnataka_Assembly_


இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களின் அமளியால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் பேச அனுமதி வழங்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மாலைக்குள்ளாகவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று காலை தெரிவித்த நிலையில், இதற்கு முதல்வர் குமாரசாமி உடன்படவில்லை.

கர்நாடகாவில் ஒருவழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போறாங்க; எப்போ தெரியுமா...?

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் குமாரசாமி.

கடந்த வியாழக்கிழமை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்த போதிலும், அந்த தினமும், வெள்ளிக்கிழமையும் அதன் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

பல்வேறு அலுவல்களை பேசி, ஆளும் கட்சி காலம் தாழ்த்தி விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. வியாழக்கிழமை இரவு முழுக்க சட்டசபையிலேயே தங்கி, தூங்கி எழுந்து தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமை இன்று மீண்டும் சட்டசபை கூடியது.

முன்னதாக தனது வீட்டுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில், எக்காரணத்தைக் கொண்டும் இன்று மாலை 6 மணிக்கு ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி விட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ஆனால் நான் சர்வாதிகாரி கிடையாது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது கர்நாடகா சட்டப்பேரவையில் கடும் அமளி நிலவியதையடுத்து அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது இன்னும் எவ்வளவு தூரம் நீட்டிக்கும் எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி