ஆப்நகரம்

ram mandir: நிர்வாகிகளுக்கு சம்பளம் கிடையாது, நன்கொடைகளை முதலீடு செய்யலாம்... அசரவைக்கும் ராமர் கோயில் ட்ரஸ்ட் விதிகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு விதிக்கப்பட்டுள்ள 9 முக்கிய விதிகள் குறித்த செய்தித் தொகுப்பு...

Samayam Tamil 8 Feb 2020, 2:09 pm
150 ஆண்டுகால ராம ஜென்ம பூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதித்தீர்ப்பு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி வெளியானது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் அமர்வு ஒரே தீர்ப்பாக வெளியிட்ட தீர்ப்பின்படி பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ( சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ) இந்து அமைப்பினர் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.
Samayam Tamil ram mandhir


ராமர் கோயில் கட்டுவதற்கான அமைப்பு / அறக்கட்டளை தொடங்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் 1045 பக்கத் தீர்ப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

தற்போது அந்த அமைப்புக்கான 9 மைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை,

1.அமைப்பின் நிரந்தர அலுவலகம் ஒன்று கிரேட்டர் கைலாஷ் முதல் பகுதியில், ஆர்-20 அருகில் அமைக்கப்படும். கோயில் கட்டுவது தொடர்பான விவாதங்கள் இங்கு நடைபெறும்.

2கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் இந்த அறக்கட்டளை சுதந்திரமாக எடுக்கலாம். இங்கு வரும் பக்தர்களுக்காக சமையலறை, கோசாலை, அருங்காட்சியகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

3. அறக்கட்டளையினர் சட்டபூர்வமான நன்கொடைகள், அன்பளிப்புகள், அசையாச் சொத்துகள் மற்றும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மூலம் வரும் உதவிகளையும் ஏற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த அறக்கட்டளை கடன் பெறவும் செய்யலாம்.

4. அறக்கட்டளை அறங்காவலர்கள் குழுவிலிருந்து ஒருவரை தலைமை நிர்வாகியாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த தலைமை நிர்வாகி, கூடுகைகளை முன்னெடுப்பார். அதே சமயம் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் நியமிக்கப்படுவர்.

5. கோயில் கட்டுவதற்காக, இருப்பு நிதிகளுக்கான முதலீடு குறித்த முடிவையும் இந்த அறக்கட்டளையே எடுக்கலாம். எல்லா முதலீடுகளும் அறக்கட்டளையின் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.

6. ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக வாங்கப்படும் நன்கொடை மொத்தமும் அறக்கட்டளையின் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். மற்றெந்த வேலைக்கும் பயன்படுத்தப்படக்கூடாது.

7. அறக்கட்டளையுடன் தொடர்புடைய எந்த அசையாச் சொத்தையும் விற்க அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உரிமை இல்லை

8.இதற்கான கணக்கு வழக்குகளை அறக்கட்டளை மேற்கொள்ளும். இந்த கணக்கு வழக்குகள் தணிக்கைக்குட்பட்டவை.

9. அறக்கட்டளை நிர்வாகிகளுகு ஊதியம் ஏதும் கிடையாது.ஆனால், நிர்வாகிகள் மேற்கொள்ளும் பயணங்களுக்கான பயணப்படி வழங்கப்படும்.

இவ்வாறாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி