ஆப்நகரம்

கோழிக்கறியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி?

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளனர்.

TNN 22 Dec 2017, 2:00 pm
ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil seven persons died one family at yadadri in telangana
கோழிக்கறியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி?


ஆந்திரா, வாரங்கல் மாவட்டத்திலுள்ள திருமலகிரியில் உள்ள ராஜபேட்டையில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில், ஒரு மாதத்திற்கு முன்னர் பால்ராஜ் என்பவரின் குடும்பம் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையிலிருந்து கோழி ஒன்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இரவு‌ சாப்பிட்ட உணவால் இறந்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி