ஆப்நகரம்

7 வயது சிறுமையை பாலியல் சித்ரவதை செய்த சீனியர் மாணவிகள்

தில்லி மோதி நகரில் உள்ள அரச பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமியை கடந்த 4 மாதங்களாக சீனியர் மாணவிகள் இருவர் பாலியல் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

TNN 27 Feb 2017, 11:12 am
புதுதில்லி: தில்லி மோதி நகரில் உள்ள அரச பள்ளியில் படித்து வரும் 7 வயது சிறுமியை கடந்த 4 மாதங்களாக சீனியர் மாணவிகள் இருவர் பாலியல் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
Samayam Tamil seven year old schoolgirl sexually assaulted by two seniors
7 வயது சிறுமையை பாலியல் சித்ரவதை செய்த சீனியர் மாணவிகள்


அதேப்பள்ளியில் 8 மற்றும் 9ஆம் வகுப்பில் படிக்கும் அந்த சீனியர் மாணவிகள் சிறுமியை காலி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாச செயல்களில் ஈடுபடுத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவிகளும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு வயது 19. இவர், பலமுறை வகுப்பில் தேர்ச்சி பெறாமல் தற்போது 9ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, சிறுமியின் தந்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டறிந்ததாக கூடுதல் ஆணையர் தீபேந்திர பதாக் கூறியுள்ளார்.

சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபாசமாக நடந்துக் கொள்ள மறுத்ததால் அடிப்பதாக கூறி மிரட்டியுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு மாணவிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இதுபோன்று வேறு எந்த மாணவிகளுக்கும் ஏற்படுகிறதா என்பது குறித்து அறிய சிறப்பு முகாம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

A seven-year-old girl studying in a government school in Moti Nagar has alleged that she was being sexually assaulted by two of her seniors over the past four months.

அடுத்த செய்தி