ஆப்நகரம்

ஆக்சிஜன் டேங்கரில் திடீர் கசிவு; நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த பயங்கரம்!

ஆக்சிஜன் நிரப்பும் பணியின் போது ஏற்பட்ட கசிவால் நோயாளிகள் ஏராளமானோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2021, 3:07 pm

ஹைலைட்ஸ்:

  • ஆக்சிஜன் டேங்கரில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கசிவு
  • 11 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சோகம்
  • உரிய விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தகவல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Nashik Oxygen Leak
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் டேங்கர்களை நிரப்பும் பணி இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் திடீரென டேங்கரில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், ஆக்சிஜன் கசிவை தடுத்து நிறுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய மாநில உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங்கனே,
இறந்ததோ 94, சொன்னதோ வெறும் 3; மறைக்கப் பார்க்கிறதா மாநில அரசு?
இதுவொரு எதிர்பாராத சம்பவம். விபத்தில் 11 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன. இதுபற்றி விரிவான அறிக்கை கேட்டுள்ளோம். நாசிக் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனாவால் மரணப் படுக்கையை பார்த்துவிட்டேன்: நடிகை திடுக் தகவல்
மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே பேசுகையில், டேங்கர்களின் வால்வுகளில் கசிவு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவிலான ஆக்சிஜன் கசிவு. இந்த விஷயத்தால் மருத்துவமனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

என்னது முழு ஊரடங்கா; அதுவும் இத்தனை நாட்கள்? வெளியாகிறது ஷாக் அறிவிப்பு!

இதுதொடர்பாக மேலும் தகவல்களை விசாரித்து வருகிறேன். விரைவில் அரசு சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்படும் என்றார். தற்போது டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனையில் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பலி எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி