ஆப்நகரம்

NEET, JEE நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சிறப்பு வசதியை ஏற்பாடு செய்துள்ளன.

Samayam Tamil 31 Aug 2020, 6:04 am
NTA எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படும் ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதேபோல் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் 2020 தேர்விற்கு 9.53 லட்சம் மாணவர்களும், நீட் தேர்விற்கு 15.97 லட்சம் மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக் கூடாது என்றும், மாணவர்கள் பாதுகாப்பு கருதி ஒத்திவைக்க வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் குரலெழுப்பின. இதுபற்றி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், பிரதமர் மோடிக்கும் மாறி மாறி கடிதம் எழுதியும் பலனில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது.
Samayam Tamil NEET JEE Exam 2020


நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டைத் தான் பெரும்பாலானோர் பதிவிறக்கம் செய்துவிட்டனரே. இது அவர்கள் தேர்வு எழுத தயாராக இருப்பதையே காட்டுகிறது என்று காரணம் கூறி சமாளித்துவிட்டது. இருப்பினும் டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இடியாப்பச் சிக்கலில் NEET - JEE தேர்வுகள்; தள்ளிவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இதற்கிடையில் நுழைவுத்தேர்வு நெருங்கிவிட்டது. எனவே இதற்கு தயாராவது ஒன்றே சரி என பல்வேறு மாநிலங்களும் தங்களைச் சமாதானம் செய்து கொண்டுள்ளன. இந்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன. இதற்காக ஒடிசா மாநிலத்தில் பொறியியல் கல்லூரி விடுதிகள்/ ஐடிஐக்கள் திறக்கப்பட்டுள்ளன.

அங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு சிறப்பு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்களது நுழைவுத்தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவித்து இலவச பயணம் மற்றும் தங்குமிட வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலமும் நுழைவுத்தேர்விற்கான மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அடிச்சுது ஜாக்பாட்; 10வது பாஸ் ஆன மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் - ஆனால் ஒரு கண்டிஷன்!

அதாவது 181 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ அல்லது mapit.gov.in/covid-19 என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமோ தேர்வு மையங்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தேர்வு மையங்களுக்கு செல்லவும், மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பவும் இலவச போக்குவரத்து வசதிகளைப் பெறலாம்.

மேலும் சட்டீஸ்கர் மாநிலமும் தேர்வு மையங்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி