ஆப்நகரம்

சிக்கிம் எல்லையில் ஊடுருவல் முயற்சி; சீன ராணுவம் ஓட ஓட விரட்டியடிப்பு!

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களின் செயல் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Jan 2021, 11:26 am

ஹைலைட்ஸ்:

  • எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம்
  • அதிரடியாக தாக்குதல் தொடுத்த இந்திய ராணுவம்
  • ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil India China Border Dispute
இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் சீனப் படைகளை திரும்பப் பெறுவதற்கான தொடர் பேச்சுவார்த்தை இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்பதாவது கட்டப் பேச்சுவார்த்தை நேற்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவு பெற்றது.
சீன எல்லையை தாண்டி அமைந்துள்ள மால்டோ என்னுமிடத்தில் ஜெனரல் பி.ஜி.கே மேனன் தலைமையிலான இந்தியக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் கடந்த ஒன்பது மாதங்களாக எல்லைப் பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தைக் குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பாலியல் வன்முறை: மும்பை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு!
இதையடுத்து சீனப் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சீன தரப்பு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் இந்திய ராணுவம் சமர்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இந்தியா - சீனா இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் ஊடுருவ முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தக்க நேரத்தில் கவனித்த இந்திய ராணுவத்தினர், அந்த வீரர்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ட்விட்டரில் பெருமைப்பட்ட சதீஷுக்கு சிவகார்த்திகேயன் செம நோஸ்கட்

இதில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது. சிக்கிம் எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி