ஆப்நகரம்

மருத்துவமனையில் பயங்கர தீ; 10 பச்சிளங்குழந்தைகள் பலியான சோகம்!

தீவிபத்தில் ஏராளமான பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jan 2021, 8:28 am
மகாராஷ்டிர மாநிலம் பந்தாரா நகரில் நான்கு மாடிகள் கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 9) அதிகாலை 2 மணியளவில் அங்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு சிகிச்சை பிரிவில் தீப்பற்றியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பிறந்த ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரையிலான குழந்தைகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன.
Samayam Tamil Bhandara Hospital Fire


இவற்றை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து குழந்தைகளையும் மீட்க முடியவில்லை. மொத்தம் 17 குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் 7 குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

முதல்வரை கொல்ல சதி; மர்ம கடிதம் அனுப்பியது யார்? பெரும் பரபரப்பு!
பத்து பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி பலியாகியிருக்கின்றன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மின்கசிவு ஏதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. எனவே தீவிபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பந்தாரா பொது மருத்துவமனையில் ஏற்பட்ட நிகழ்வு மிகவும் சோகமானது.

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து: அப்போ ஈஸ்வரன் கதி?
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த குழந்தைகள் மற்றும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மகாராஷ்டிர அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி