ஆப்நகரம்

என்னது கண்டிப்பா நடக்குமா? வேண்டாம்; உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிய 6 மாநில அரசுகள்!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நுழைவுத்தேர்வு விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

Samayam Tamil 28 Aug 2020, 1:58 pm
வரும் செப்டம்பர் மாதம் தேசிய அளவில் நீட் மற்றும் ஜேஇஇ ஆகிய நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளின் அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இவர்கள்,
Samayam Tamil NEET JEE Exams


1 - மேற்குவங்க சட்டத்துறை அமைச்சர் மாலோய் கட்டாக்

2 - ஜார்க்கண்ட் நிதித்துறை அமைச்சர் ரமேஷ்வர் ஓரோவன்

3 - ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா

4 - சட்டீஸ்கர் உணவுத்துறை அமைச்சர் அமர்ஜீத் பகத்

5 - பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து

6 - மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் உதய் ஆர்.சமந்த்

இடியாப்பச் சிக்கலில் NEET - JEE தேர்வுகள்; தள்ளிவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆகியோர் ஆவர். அதாவது, நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக கடந்த 17ஆம் தேதி நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாழ்க்கை நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். எதற்காக நின்றுவிடக் கூடாது.

கொரோனா நோய்த்தொற்றால் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டது. இதனை எதிர்த்து தான் 6 மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், உரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி