ஆப்நகரம்

வெடித்து சிதறிய ஜெலட்டின் குச்சிகள்; அதிர்ந்த நிலப்பகுதி - பலர் பலியான சோகம்!

வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதில் பலர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 22 Jan 2021, 8:11 am
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஹுனசூடு கிராமத்தில் ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி இருக்கிறது. இங்கு பயன்படுத்துவதற்கு தேவையான ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடிபொருட்கள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில்வே கிரசர் அருகே சென்ற போது லாரியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் லாரியில் இருந்த வெடிபொருட்கள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
Samayam Tamil Fire


இது சிவமொக்கா மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள சிக்கமகளூரு, தாவனகரே ஆகிய மாவட்டங்களிலும் நில அதிர்வு போன்று உணரப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பலரும் நிலநடுக்கம் என்றே தவறாக புரிந்து கொண்டனர்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தீ விபத்து: 5 பேர் பலி!
இந்த வெடிவிபத்தில் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிவமொக்கா புறநகர் தொகுதி எம்.எல்.ஏ அசோக் நாயக் கூறுகையில், சிவமொக்கா அருகே பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. அது வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறியதால் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து சிவமொக்கா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு போல் உணரப்பட்டுள்ளது என்றார்.

டிவிட்டரில் 'அசுரன் நடிகர்' ஆக மாறிய தனுஷ்!!
இந்நிலையில் சிவமொக்கா வெடிவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி