ஆப்நகரம்

டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம்; பற்றி எரிந்த தீயில் பலர் பலியான சோகம்!

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தில் பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2019, 8:42 am
டெல்லியில் உள்ள கிராரி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான துணி குடோன் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 12.30 மணியளவில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
Samayam Tamil Delhi Fire


நள்ளிரவு நேரம் என்பதால் விபத்து பற்றி அருகில் இருந்த மக்களால் உணர முடியவில்லை. மளமளவென பரவிய தீயால் கரும்புகை வெளியானது.

நெஞ்சில் பாய்ந்த தோட்டா, உயிரை காப்பாற்றிய சில்லறை.. உ.பி. வன்முறையில் உயிர் பிழைத்த காவலர்...

இந்த சூழலில் தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர்கள் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 9 பேர் பலியாகி இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த குடோன் நான்கு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பால் மட்டுமே அவர்களைத் தோற்கடிக்க முடியும்: ராகுல் காந்தி

கடந்த 8ஆம் தேதி டெல்லி அனாஜ் மண்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதற்கடுத்த நாளும் அதே கட்டடத்தில் தீபற்றி எரிந்து மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. டெல்லியில் நிகழும் தொடர் தீவிபத்து சம்பவங்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வருகின்றன.

வீடியோ.! பிறந்தநாளில் தொகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரோஜா...

அடுத்த செய்தி