ஆப்நகரம்

கேரளாவுக்கு உதவி: கோடிகளை வழங்கிய மாநிலங்கள்

கேரள வெள்ள நிவாரண நிதி உதவியாக பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளன.

Samayam Tamil 18 Aug 2018, 4:39 pm
கேரள வெள்ள நிவாரண நிதி உதவியாக பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளன.
Samayam Tamil c6dmh73g_kerala-rain-rescue-ops-afp_625x300_16_August_18 (1)


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.5 கோடி கொடுத்தது.

இன்று தமிழக அரசு சார்பில் கூடுதலாக ரூ.5 கோடி கேரளாவுக்கு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தெலுங்கானா ரூ.25 கோடியும் டெல்லி ரூ.10 கோடியும் ஏற்கெனவே வழங்கின.

குஜராத், பீகார் மாநில அரசுகள் தலா ரூ.10 கோடியும் ஒரிசா, ஜார்க்கண்ட் அரசுகள் தலா ரூ. 5 கோடியும் மகாராஷ்ட்ரா ரூ.20 கோடியும் கேரள நிவாரண நிதிக்கு இன்று அளித்துள்ளன.

அடுத்த செய்தி