ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

தீவிர கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் வகையிலான நிகழ்வு நடந்துள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 10:45 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் திறப்பில் மிகுந்த நம்பிக்கையுடன் முடிவெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 8ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. விரைவில் பொதுத்தேர்வு வரவுள்ளதை அடுத்து, சனி, ஞாயிறு தவிர தொடர்ச்சியாக 100 நாட்கள் பாடம் கற்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.
Samayam Tamil several teachers students tested covid 19 positive after schools reopen in odisha
பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!


அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதேசமயம் பெற்றோர்கள் சம்மதம் மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளி வளாகங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் கஜபதி மாவட்டத்தில் பள்ளிகளுக்குச் சென்ற 31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோல்கேட் கட்டணம் இல்லை; அதுவும் இந்தியா முழுவதும் - யாருக்கெல்லாம் தெரியுமா?

இதுதொடர்பாக பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் குமார் பத்ரா, மாவட்டம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் ஆசிரியர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுவதுமாக குணமாகும் வரை பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி கோவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நீங்க தான் காரணம்: சிவகார்த்திகேயனை கை காட்டிய குக் வித் கோமாளி அஸ்வின்
அதில் நெகடிவ் சான்று பெற்றவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மாநில அரசின் உத்தரவுப்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி