ஆப்நகரம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத சரத்பவார்; பாஜ., குதூகலம்

’நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு பதில் என் குடும்ப உறுப்பினர்கள் இருவர் போட்டியிட உள்ளனர்’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 4:31 pm
’நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு பதில் என் குடும்ப உறுப்பினர்கள் இருவர் போட்டியிட உள்ளனர்’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sarath pawar


பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று சண்முகானந்தா அரங்கில் நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், புல்வாமா தாக்குதல் குறித்து பா.ஜனதாவை விமர்சித்து பேசிய ராஜ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

பாராமதி (சரத்பவாரின் சொந்த ஊர்) எப்போதும் புதிய கிளியை தேடி கொண்டே இருக்கும். அவர்களால் (சரத்பவார்) சில விஷயங்களை பா.ஜனதாவிற்கு எதிராக பேச முடியாது. எனவே அவர்கள் பேச நினைப்பதை அந்த கிளியை வைத்து பேச வைப்பார்கள்.

அவர் (ராஜ் தாக்கரே) ஒரு நடிகராக அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை அழகாக பேசுகிறார். தற்போது அவர் பேச வேண்டிய கருத்துக்கள் பாராமதியில் இருந்து வருகிறது.
இவ்வாறு பட்னாவிஸ் நக்கலாக சரத் பவாரை விமர்சித்தார்.

நேற்று அகில இந்திய மக்களவை தேர்தல் தேதிகள், வாங்கு எண்ணும் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ’நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு பதில் என் குடும்ப உறுப்பினர்கள் இருவர் போட்டியிட உள்ளனர்’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சரத்பவாரின் இந்த அறிக்கையை தொடர்ந்து மகாராஷ்ட்ரா பாஜ., போட்டியிட பயப்படும் சரத்பவார் என அவரை மேலும் நக்கலடித்து வருகிறது.

அடுத்த செய்தி