ஆப்நகரம்

அவங்க எந்த தைரியத்துல ஆட்சியமைக்க முடியும்னு சொல்றாங்கன்னு தெரியல : சிவசேனாவை சாடிய சரத் பவார் !!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு சிவசேனா எந்த தைரியத்தில் உரிமைக் கோர முடியும் எனத் தெரியவில்லை என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காட்டமாக கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Nov 2019, 8:30 pm
Samayam Tamil sss
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தங்கள் வசம் 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதென்று சிவசேனா எதனடிப்படையில் கூறி வருகிறது எனத் தெரியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கலாய்த்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள், கடந்த வாரம் மீண்டும் நடைபெற்றன.

இதனை உறுதி செய்யும் விதமாக, மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்றது.

சிவசேனாவோட பேசி ஒரு முடிவுக்கு வந்திடுச்சாம் காங்கிரஸ் ! இனியாவது ஆட்சி அமைப்பாங்களா?

அந்தக் கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதன் அடையாளமாக, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது; இதுதொடர்பாக மூன்று கட்சிகளின் தலைவர்கள் இறுதி முடிவு எடுத்த பின்பு, மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக, ஆளுநரை மீண்டும் சந்தித்து உரிமைக் கோரப்படும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த தகவலின்படி இதுநாள்வரை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் ஆளுநரை சந்திக்கவில்லை.

மாறாக,. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தான், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று (திங்கள்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சோனியா உடனான ஆலோசனைக்கு பின்னர், சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியது:
மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போது அரசியல் நிலவரம் குறித்து சோனியாவுடன் விரிவாக ஆலோசித்தேன். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து, மேற்கொண்டு விவாதித்து எங்களிடம் தெரிவிக்க உள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்?!!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க தங்களிடம் 170 எம்எல்ஏக்களின் பலம் உள்ளதென சிவசேனா தொடர்ந்து கூறி வருகிறது. எதனடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதைப் பற்றி சிவசேனாவிடம் தான் கேட்க வேண்டும் என்று சரத் பவார் தெரிவித்தார்.

சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, " நாங்கள் ஆட்சி அமைப்பது குறித்தோ, சிவசேனாவை பற்றியோ பேசவில்லை. மகாராஷ்டிர மாநில அரசியல் நிலவரம் பற்றி மட்டுமே பேசினோம்" என சரத் பவார் தெரிவித்தார்.

அடுத்த செய்தி