ஆப்நகரம்

காலனி ஆட்சிக்கால கொடுமைகளுக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்: சசி தரூர்

இந்தியாவில் காலனி ஆட்சி நடத்தியபோது செய்த கொடுமைகளுக்காக, பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

TNN 5 Nov 2016, 5:05 pm
இந்தியாவில் காலனி ஆட்சி நடத்தியபோது செய்த கொடுமைகளுக்காக, பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil shashi tharoor seeks apology from britain for atrocities during colonial
காலனி ஆட்சிக்கால கொடுமைகளுக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்: சசி தரூர்


பிரிட்டன் பிரதமர் தெரசா மே அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தரவுள்ளார். இத்தகைய சூழலில், பிரிட்டனின் காலனி நாடாக இருந்த இந்தியாவில் நடைபெற்ற துயரச் சம்பவங்களை தொகுத்து, சசி தரூர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி வெளியிட்டார்.

அப்போது பேசிய சசி தரூர், காலனித்துவ ஆட்சியை இந்திய மண்ணில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரிட்டன் நடத்தியதாகத் தெரிவித்தார். அப்போது, சமூக, பொருளாதார ரீதியாகக் கடும் சுரண்டல் இந்தியா முழுவதும் பிரிட்டன் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்றவற்றை பிரிட்டன் ஆட்சியாளர்களே முன்னின்று நடத்தியுள்ளதாக, சசி தரூர் கூறினார்.

இவற்றுக்காக, பிரிட்டன் அரசு இந்தியாவிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அதையும் உடனடியாக, அறிக்கை அல்லது ஊடக சந்திப்பு மூலமாக பிரிட்டன் ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்வதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பீடு திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும், ஒரு மன அமைதி இந்திய மக்களுக்குக் கிடைக்கும். இதனை, பிரிட்டன் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் சசி தரூர் எம்.பி., குறிப்பிட்டுள்ளார்.

English Summary:

An atonement or an apology by the British Prime Minister or the Queen will "wash away a lot" of the atrocities committed by Britain on India during its colonial rule, Congress leader Shashi Tharoor today said.

அடுத்த செய்தி