ஆப்நகரம்

சதாப்தி ரயிலில் பயணிக்கு கொடுத்த உணவில் புழு!!

சதாப்தி ரயிலில் பயணிக்கு கொடுத்த உணவில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 11:22 am
புதுடெல்லி - ஹபீப்கஞ்ச் இடையே இயங்கி வரும் சதாப்தி எகஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Worm


சதாப்தி எகஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அதுல் கல்காங்வார் இந்த ரயிலின் மூன்றாவது கோச்சில், இருக்கை எண் 20இல் பயணித்தார். இவர் தனக்கு சைவ உணவு வேண்டும் என்று ஆர்டர் செய்து இருந்தார். உணவும் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. சாப்பிடுவதற்கு பாக்சை திறந்தபோது, அந்த உணவில் புழு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு அதுகுறித்து புகார் அளித்தார். ஐஆர்சிடிசி புகாரை பதிவு செய்த பின்னர் முறையான விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.

மோடி, அமித் ஷாவுக்கு குறிவைத்து இருக்கும் பயங்கரவாத அமைப்பு!!

இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன. ரயிலில் கொடுக்கும் உணவில் கரப்பான், பூச்சி, புழு இருந்தது போன்ற புகார்கள் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தரமான உணவுகளை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று காலம் காலமாக பயணிகள் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை.

இதோ அடுத்த கவுரவம்- அமெரிக்காவில் ’குளோபல் கோல்கீப்பர்’ விருது வாங்கிய பிரதமர் மோடி!

அடுத்த செய்தி