லக்னோ: இந்து கோவில் கட்ட, இஸ்லாமிய வாரியம் நிதியுதவி அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம், சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வக்பு வாரியம் ரூ.10,000 நிதியுதவி அளித்துள்ளது.
முன்னதாக கோவில் கட்டுமானம் தொடர்பான பணிமனைக்குச் சென்று வக்பு வாரியம் பார்வையிட்டது.
ராம்ஜன்பபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் நிரித்யா கோபால் தாஸை, அவரது பிறந்தநாள் அன்று நேரில் சந்தித்து உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் ரிஸ்வி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய ரிஸ்வி, தற்போது அளித்துள்ள நன்கொடை என்பது தொடக்கமே. ராமர் கோவில் கட்டத் தொடங்கிய பிறகு, பல்வேறு இஸ்லாமியர்கள் ஏராளமான தொகை வழங்குவர் என்று கூறினார். எனது முதல் பங்களிப்பாக, இந்த நன்கொடையை வழங்கியுள்ளேன்.
செக்யூலர் இஸ்லாமியர்கள் ராமர் கோவில் பிரச்சனையை தீர்க்கத் தான் பார்க்கின்றனர். ஆனால் தீவிரவாத இஸ்லாமியர்கள் மட்டுமே பாகிஸ்தான் துணையுடன், ராமர் கோவில் பிரச்சனையை பெரிதாக்க நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
Shia board chief donates for Ram temple.
உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியம், சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வக்பு வாரியம் ரூ.10,000 நிதியுதவி அளித்துள்ளது.
முன்னதாக கோவில் கட்டுமானம் தொடர்பான பணிமனைக்குச் சென்று வக்பு வாரியம் பார்வையிட்டது.
ராம்ஜன்பபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் நிரித்யா கோபால் தாஸை, அவரது பிறந்தநாள் அன்று நேரில் சந்தித்து உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் ரிஸ்வி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய ரிஸ்வி, தற்போது அளித்துள்ள நன்கொடை என்பது தொடக்கமே. ராமர் கோவில் கட்டத் தொடங்கிய பிறகு, பல்வேறு இஸ்லாமியர்கள் ஏராளமான தொகை வழங்குவர் என்று கூறினார். எனது முதல் பங்களிப்பாக, இந்த நன்கொடையை வழங்கியுள்ளேன்.
செக்யூலர் இஸ்லாமியர்கள் ராமர் கோவில் பிரச்சனையை தீர்க்கத் தான் பார்க்கின்றனர். ஆனால் தீவிரவாத இஸ்லாமியர்கள் மட்டுமே பாகிஸ்தான் துணையுடன், ராமர் கோவில் பிரச்சனையை பெரிதாக்க நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
Shia board chief donates for Ram temple.