ஆப்நகரம்

நீர் பாசன திட்டத்துக்கு 500 கோடி ரூபாய் வழங்க ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு!

கோதாவரி நீர் பாசன திட்டத்துக்காக மகாராஷ்டிரா அரசுக்கு 500 கோடி ரூபாய் கொடுக்க ஷீரடி சாய்பா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 7:12 pm
கோதாவரி நீர் பாசன திட்டத்துக்காக மகாராஷ்டிரா அரசுக்கு 500 கோடி ரூபாய் கொடுக்க ஷீரடி சாய்பா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
Samayam Tamil 66903242


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு நாடுமுழுவதிலும் இருந்து தினந்தோறும் குறைந்தது 70 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். திருவிழாக்காலங்களின் போது சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் மொத்தமாக தரிசனம் செய்ய வருவார்கள். இந்த நிலையில், அண்மை காலமாக பருவமழை பொழியாததால் வடக்கு மகாராஷ்டிரா பகுதியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோதாவரி ஆற்றிலிருந்து வறட்சி ஏற்பட்டுள்ள மரத்வாடா பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன திட்டம் போடப்பட்டது. ஆனால், மாநில அரசிடம் போதுமான நிதி இல்லாததால், இந்த திட்டம் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், தற்போது வறட்சியை சமாளிக்கும் வகையில் நீர் பாசனம் அமைக்க ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை முன்வந்துள்ளது. அதன்படி அறக்கட்டளை சார்பில் மாநில அரசுக்கு 500 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கடனுக்கு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

கோதாவரி நீர் பாசனம் அமைக்க மொத்தம் 1,200 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இதற்காக இந்த வருடம் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் 500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதால், அடுத்த ஆண்டு மாநில பட்ஜெட்டில் 400 கோடி ரூபாய்க்கு ஒதுக்கி கோதாவரி நீர் பாசனம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி