ஆப்நகரம்

சபரிமலை தீர்ப்பு: அக்., 1ல் முழு அடைப்புக்கு அழைப்பு

சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Samayam Tamil 29 Sep 2018, 4:11 pm
சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
Samayam Tamil sabarimala-kpIF--621x414@LiveMint-d0a7


கேரள மாநிலம சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்களைப் போலவே அனைத்து பெண்களும் வயது வரம்பின்றி வழிபாடு செய்ய அனுமதி அளித்து உச்சநீதின்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது

தேவசம் போர்டு சார்பில் இத்தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் மாநிலம் தழுவிய 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு சிவசேனா அழைப்பு விடுத்திருக்கிறது.

அடுத்த செய்தி